Saturday, December 5, 2009

ஆதித்ய ஹ்ருதயம்



 http://www.astrologyforu.com/img/festivals/sun-god-lord-aditya.jpg
ஆதித்ய ஹ்ருதயத்தின் 21 முதல் 25 வரையிலான சுலோகங்கள்:

தப்த சாமீகராபாய வஹ்னயே விஸ்வகர்மணே
நம: தமோபிநிக்னாய ருசயே லோகசாக்ஷிணே

taptha chaamiikaraabhaaya vahnayE visva karmanE
nama: thamObhinignaaya rucayE lOkasAkshinE


தப்த சாமீகராபாய - உருக்கிய பொன்னின் நிறத்தைக் கொண்டவருக்கு
வஹ்னயே - தீ வடிவானவருக்கு
விஸ்வகர்மனே - உலகத்தின் அனைத்து செயல்களையும் செய்பவருக்கு
தம அபிநிக்னாய - இருளை அழிப்பவருக்கு
ருசயே - உலகத்தில் ஒளியை எல்லாம் உடையவருக்கு
லோக சாக்ஷினே - உலகத்தில் சாட்சியாக நிற்பவருக்கு
நம: - வணக்கங்கள்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஸத்யேஷ கபஸ்திபி:

nasayathyEsha vai bhuutham thadEva Srujathi prabhu:
pAyathyEsha tapathyEsha varSathyEsha gabhastibhi:

நாசயதி ஏஷ வை பூதம்: - உயிர்களை எல்லாம் இவனே அழிக்கிறான்
தத் ஏவ ஸ்ருஜதி - அவற்றை இவனே பிறப்பிக்கிறான்
ப்ரபு: - இறைவன் இவனே
பாயதி ஏஷ - இவனே காக்கிறான்
தபதி ஏஷ - இவனே வெயிலாகக் காய்கிறான்
வர்ஸதி ஏஷ - இவனே மழையாகப் பொழிகிறான்
கபஸ்திபி: தன்னுடைய ஒளி பொருந்திய கதிர்களால்
இவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் செய்கிறான். இவனே வெயிலாகவும் மழையாகவும் இருக்கிறான்.

ஏஷ சுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோத்ரினாம்

yEsha supthEsu jAkarthi bhUthEsu pariniStitha:
yEsha yEvAknihOthram cha phalam chaivaaknihOthrinAm

ஏஷ - இவனே
பூதேஷு - எல்லா உயிர்களிலும்
சுப்தேஷு ஜாகர்தி பரிநிஸ்டித: - அவை உறங்கும் போதும் விழிப்பாக நிலை நிற்கிறான். (அவற்றின் உயிராக நிற்கிறான்)
ஏஷ ஏவ அக்னி ஹோத்ரம் ச - இவனே தீ வழிபாட்டின் வடிவமாகவும் இருக்கிறான்
பலம் ச ஏவ அக்னி ஹோத்ரினாம் - அத்தீவழிபாட்டின் பயனாகவும் இருக்கிறான்

வேதாஸ் ச க்ரதவசைவ க்ரதூனாம் பலம் ஏவ ச
யானி க்ருத்யானி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:

vEdASca krathavascaiva krathUnAm phalamEva ca
yAni kruthyAni lOkEshu sarva yEsha ravi: prabhu:

ச ஏவ - இவனே
வேதா: - வேதமாகவும்
க்ரத: - சடங்குகளாகவும்
க்ரதூனாம் பலம் - சடங்குகளின் பயனாகவும்
ஏவ ச - இவனே இருக்கிறான்
லோகேஷு - இவ்வுலகத்தில்
யானி க்ருத்யானி - என்ன என்ன செயல்கள் செய்யப்படுகின்றனவோ
சர்வ ஏஷ - அவை எல்லாமும் இவனே
ரவி: - ஒளி படைத்தவன்
ப்ரபு: - இறைவன்; தலைவன்

ஏனமாபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்த்தயேன புருஷ: கச்சின் நாவஸீததி ராகவ:

yEnamApathSu kruchrEshu kAnthArEshu bhayEshu cha
kIrthayEna purusha: kascin nAvaSithathi rAghava:


ராகவ: - இராகவா!
ஏனம் - இவன்
க்ருச்ரேஷு ஆபத்ஸு - எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும்
காந்தாரேஷு - காடுகளிலும்
பயேஷு ச - பயமுறுத்தும் நேரங்களிலும்
கீர்த்தயேன புருஷ: - இவனைப் பாடி வழிபடுவோரை
கச்சின் - எப்போதும்
நாவஸீததி - கைவிடமாட்டான்.

--
ᄊムん乇